என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
சுஜித் இயக்கத்தில், பவன் கல்யாண், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்த 'ஓஜி' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. 250 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது.
இப்படத்தை நேற்று ஹைதராபாத்தில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் சிரஞ்சீவி குடும்பத்தினர் மட்டும் பார்ப்பதற்காக பிரத்யேகக் காட்சி நடைபெற்றது. சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், படத்தின் நாயகன் பவன் கல்யாண், அவரது மகன் அகிரா நந்தன், நடிகர்கள் சாய் துர்கா தேஜ், வருண் தேஜ், வைஷ்ணவ் தேஜ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான ஜுரத்தில் ஓய்வில் இருந்தார் பவன் கல்யாண். குணமடைந்ததைத் தொடர்ந்து நேற்றைய பிரத்யேகக் காட்சியில் தனது குடும்பத்தினருடன் அவரும் கலந்து கொண்டார்.
படம் பற்றிப் பேசிய சிரஞ்சீவி, “சொல்ல வார்த்தையே இல்லை, சூப்பர், சூப்பர்,” என்று பாராட்டினார்.