ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோபிதா துலிபாலா. தமிழில் இவர் நடித்த ஒரே படம் இதுதான். மற்றபடி தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் மாறி மாறி நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் அவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது அதன்பிறகு இப்போது வரை சோபிதா எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இதனால் அவர் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆவதற்காக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்று கூட சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். அதுவும் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.