ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தெலுங்கு படங்களில் நடித்து வந்த
சோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு
பாகங்களிலும் வானதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த
ஆகஸ்டு மாதம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா துலிபாலா,
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த
வகையில், தமிழில் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் அவர் நடிக்கப்
போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த
படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அசோக் செல்வன், பஹத்
பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, சோபிதா துலிபாலா நாயகியாக
நடிக்கப் போகிறார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து
கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.