தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பூரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அதே பகுதியில் அனில் ரவி புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா இணைந்து நடித்து வரும், மன சங்கர வர பிரசாத் கரு என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரஞ்சீவி படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிக்கு விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத், தபு மற்றும் சார்மி ஆகியோர் சென்று அவர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இரண்டு படகுழுவினரும் நீண்ட நேரம் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.