காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மற்ற மொழி நடிகர்களைவிட தெலுங்கு நடிகர்கள் தான் அதிகம் பேர் சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், நானி, விஜய் தேவரகொண்டா என அந்தப் பட்டியல் நீளமாகவே உள்ளது.
இளம் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 10 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார். அதற்காக தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனுக்கு முன்பாகவே இன்ஸ்டாகிராம் தளத்தில் விஜய் தேவரகொண்டா, 10 மில்லியன் பாலோயர்களைக் கடந்துவிட்டார். அவருக்கு தற்போது 10.2 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.
இருப்பினும் பேஸ்புக்கில் 20 மில்லியன் பாலோயர்கள், டுவிட்டரில் 5.5 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பாலோயர்கள் என தெலுங்கு நடிகர்களில் சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் அல்லு அர்ஜுன்.