விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக வெற்றி பெற்று பொறுப்பேற்றார். இத்தனை வருடங்களில் தலைமை பொறுப்புக்கு வரும் முதல் பெண் இவர் தான். இந்த நிலையில் தற்போது புதிய நடிகர் சங்கத்தின் முதல் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டிய ஸ்வேதா மேனன், இதில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது மீ டு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய சமயத்தில் தொடர்ந்து சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நடிகர் சங்கத்தில் உள்ள பெண் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அந்த மெமரி கார்டு காணாமல் போய்விட்டது என அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக கூறினார்கள். இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலில் நடைபெற்ற கூட்டம் தொடர்பான மெமரி கார்டு காணாமல் போன விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு கமிட்டி ஒன்றை அமைத்துள்ள ஸ்வேதா மேனன், இந்த விவகாரத்தை தாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.