படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சில மாதங்களுக்கு முன்பு மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஸ்வேதா மேனன் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடங்களில் மலையாள திரையுலகில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெண்களுக்கான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்த பிரச்சனைகளை முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட போவதாக கூறி இருந்தார் ஸ்வேதா மேனன்.
2018ல் திரையுலகில் பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்து விசாரிப்பதற்காக கேரளா அரசால் நீதிபதி ஹேமா கமிஷன் அமைக்கப்பட்ட போது இந்த பிரச்சனை தொடர்பாக நடிகைகள் பலர் ஒரு ஹோட்டலில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி விவாதித்தனர். அந்த நிகழ்வு முழுவதும் ஒரு வீடியோவாக எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மெமரி கார்டு தொலைந்து விட்டது என அப்போது இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக தெரிவித்தனர். இந்த நிலையில் தான் ஸ்வேதா மேனன் தலைமை பொறுப்புக்கு வந்ததும் அந்த மெமரி கார்டை தேடிக் கண்டுபிடிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அவர் அறிவித்துள்ளார். இந்த குழுவில் அவரும் ஒருவராக பங்கேற்றுள்ளதுடன் இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாட்ஷா வில்லன் நடிகரான தேவனையும் தன்னுடன் உதவிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல இந்த பாலியல் அத்துமீறல் குறித்து பிரச்னை கிளப்பிய நடிகைகள் அனைவருக்குமே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களிடம் ரகசிய விசாரணையை செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் இது குறித்த அறிக்கை நடிகர் சங்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஸ்வேதா மேனன் அறிவித்துள்ளார்.