ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்த 'வார் 2' ஹிந்தித் திரைப்படம், தமிழ், தெலுங்கிலும் டப்பிங் ஆகி கடந்த வாரம் வெளியானது. தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆர் இப்படத்தில் நடித்திருந்ததால் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிட்டது.
படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சித்தாரா என்டர்டெயின்மென்ட் படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி, “ஜுனியர் என்டிஆரை இதற்கு முன்பு தெலுங்குப் படங்களில் காட்டியதை விட இப்படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி அற்புதமாகக் காட்டியிருக்கிறார். இது பக்கா தெலுங்குப் படமாக இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் பெருமைப்படுவீர்கள்.
ஹிந்தியை விட தெலுங்கில் இந்தப் படம் ஒரு ரூபாயாவது அதிகம் வசூலித்து சாதனை படைக்கும். 'வார் 2' உங்களை ஏமாற்றாது, உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். படம் பார்த்த பிறகு நீங்கள் ஏமாந்தால், என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்,” என்றார்.
படம் வெளிவந்த பின் எதிர்பார்த்த அளவு நன்றாகவும் இல்லை, வசூலையும் பெறவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக தெலுங்கு ரசிகர்கள், நாக வம்சியை சமூக வலைத்தளங்களில் கடுமையாக 'டிரோல்' செய்தனர்.
அதற்கு நாகவம்சி, எக்ஸ் தளத்தில், “என்னது, என்னை ரொம்ப மிஸ் பண்ணுற மாதிரி இருக்கு. வம்சி இது, வம்சி அதுன்னு கவர்ச்சிகரமான கதைகளோடு முழு கலகலப்பு நடக்குது. பரவாயில்லை, X-ல நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க. உங்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு, ஆனா இன்னும் அந்த நேரம் வரல… குறைந்தது இன்னும் 10-15 வருஷம் இருக்கு. சினிமாவுல… சினிமாவுக்காக, எப்போவுமே! நம்ம அடுத்து விரைவில் சந்திப்போம்!,” என்று பதிலளித்துள்ளார்.
பட வெளியீட்டிற்கு முன்பாக அது சம்பந்தப்பட்டவர்கள் அடக்கிப் பேச வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாகவம்சி போல ஓவராகப் பேசினால் கடைசியில் இப்படித்தான் மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும்.