‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி 2012ல் வெளிவந்த படம் ‛துப்பாக்கி'. மிகப்பெரிய ஹிட்டான இப்படத்தின் 2வது பாகம் உருவாகுமா என விஜய் ரசிகர்கள் பலரும் பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. நடிகர் விஜயும், ‛ஜனநாயகன்' படத்துடன் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இறங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால் ‛துப்பாக்கி 2' பற்றிய பேச்சுகளும் அடங்கின.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து ‛மதராஸி' படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸிடம், நீங்கள் இயக்கிய படங்களில் எந்த படத்தை 2வது பாகம் எடுக்க விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, துப்பாக்கி படத்தை தான் 2வது பாகம் எடுக்க விரும்புவேன் என்றார். அவர் கூறுகையில், ‛‛நான் எடுத்த படங்களிலேயே இரண்டாம் பாகம் எடுப்பதற்கான சிறந்த படம் துப்பாக்கி தான். அப்படத்தில் லீவு முடிந்து விஜய் திரும்ப பணிக்கு செல்வார். அதை இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியாவில் தான் உருவாக்கினேன். திரும்பி லீவுக்கு ஊருக்கு வரும்போது நடக்கும் சம்பவங்களை வைத்து இரண்டாம் பாகம் கதையை உருவாக்கலாம் என்ற யோசனையில் தான் அப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருந்தேன்.
மேலும் படத்தில் சத்யன் கதாபாத்திரம் கூட, ‛ஒவ்வொரு லீவுக்கு ஊருக்கு வரும்போதும் எதாவது ஒரு பிரச்னையில் சிக்க வெச்சிடுற' என வசனம் பேசுவார். இதையெல்லாம் நான் வேண்டுமென்ற இரண்டாம் பாகத்திற்கான ஐடியாவிற்காக தான் வைத்திருந்தேன். எனவே துப்பாக்கி 2 படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும்''. இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.
இதனையடுத்து 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு மீண்டும் படம் நடிக்க விஜய் விரும்பினால், ‛துப்பாக்கி 2' உருவாகலாம் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.