ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரீடம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார். சசிகுமாரின் முந்தைய படமான டூரிஸ்ட் பேமிலியை போலவே இதுவும் இலங்கை தமிழர்களின் பின்னணியை கொண்டு அதே சமயம் வேறு விதமான கதை கோணத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார், “அடுத்தடுத்து இலங்கை தமிழர்களின் கதையிலேயே நடிக்கிறீர்களே, நீங்கள் இலங்கை தமிழருக்கு ஆதரவானவரா என்று கேட்கிறார்கள். நான் மொத்தத்தில் தமிழர்களுக்கு ஆதரவானவன். இன்னும் சொல்லப்போனால் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு முன்னதாகவே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. சில காரணங்களால் தாமதமாகி இப்போது வெளியாகிறது. இந்த படம் இலங்கை தமிழர்களின் கதை என்றாலும் இது வேறு விதமாக இருக்கும். இது ஜெயிலில் இருந்து விடுதலைக்காக தப்பிக்க கைதிகள் சிலர் நடத்தும் போராட்டமாக உருவாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பார்த்துவிட்டு அது போல இருக்கும் என்று நினைத்து இந்த படத்திற்கு வர வேண்டாம். பொதுவாகவே நான் அனைவரிடமும் சொல்வது படம் வெளியாவதற்கு முன்பே உங்களுடைய கதை எந்த ஜானர் என்று சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அவர்களாக படத்தைப் பற்றி ஒன்று நினைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது சில நேரம் அது அவர்களுக்கு ஏமாற்றம் தந்து விடும். அது படத்தின் வெற்றியையும் பாதித்துவிடும்” என்று பேசினார்.