அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி | ‛தனுஷ் 54'ல் நடக்காதது 55ல் நடந்தது | மம்முட்டி தயாரித்துள்ள குறும்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் | வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் |

ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஆர்ஷாபைஜூ, காளிவெங்கட், வினோதினி நடிக்கும் படம் 'ஹவுஸ்மேட்ஸ்'. ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை சிவகார்த்திகயேன் புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஏன் சொந்த பேனரில் ரிலீஸ் செய்கிறார் என்று விசாரித்தால், அதற்கான விடையை ஹீரோ தர்ஷனே சொல்லியிருக்கிறார்.
''இந்த படத்தை சிவகார்த்தியேன் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. படத்தின் சீன்கள், சில விஷயங்களை பற்றி என்னிடம் போனில் பேசிவிட்டு, இந்த படத்தை நாமதான் ரிலீஸ் பண்ணுறோம் என்றார். அவர் பேனர் ரிலீஸ் செய்வதால் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் பார்த்தவர்கள் இது பேய் படமா என கேட்கிறார்கள். நாங்கள் சில விஷயத்தை வெளியே சொல்ல முடியாது. அதை சஸ்பென்ஸ் ஆக வைத்து இருக்கிறோம். படத்தில் வருவது பேயா? வேறு எதுவுமா என்பது படம் ரிலீஸ் அன்று தெரிந்துவிடும். மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'தொடரும்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த அர்ஷா ஹீரோயின். காளிவெங்கட், வினோதினி கணவன், மனைவியாக வருகிறார்கள்'' என்றார்.
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து, ''கண்டிப்பாக, இந்த படம் வெற்றி பெறும். படத்தின் எழுத்து பேசப்படும். காளிவெங்கட் கலக்கியிருக்கிறார். என்னால் படத்தின் ஜானரை இப்போது சொல்ல முடியாது. எனக்கும் சிவகார்த்திகேயன் புரொடக்சனுக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த கம்பெனி தயாரித்த கனா படத்தில் உதவிஇயக்குனராக பணியாற்றி சம்பளம் வாங்கி இருக்கிறேன்'' என்றார். தான் ஹீரோவாக நடிக்கும் பராசக்தி படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த பட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லையாம்.