லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஓரிரு படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது பரபரப்பான பேட்டிகளில் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் யு-டியூப்பில் சமையல் நிகழ்ச்சி நடத்தி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "சினிமா பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். ஒரு பார்ட்டியில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை 'கர்மா' இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது.
சினிமாவில் நடக்கும் அநியாயங்களை தைரியமாக பேசியதால் படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யுடியூப்' சேனல் தொடங்கி சமையல் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். கவர்ச்சி ஆடை அணிந்து சமையல் நிகழ்ச்சி நடத்துவதாக விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யுடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம்தான் இப்போது என்னை வாழ வைக்கிறது" என்கிறார்.