ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எல்லா இயக்குனர்களையும் போல சினிமாவில் நடிப்பு வாய்ப்பு தேடி வந்தவர்தான் கஸ்தூரி ராஜா. ஆனால் தற்போது அவர் நடித்து வெளிவந்து 'படைத் தலைவன்' படம்தான் அவர் முதல் படம் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1985ம் ஆண்டு வெளிவந்த 'அவள் சுமங்கலிதான்' படத்தில் அவர்தான் வில்லன். படத்தில் அவர் கம்பவுண்டராக நடித்திருந்தாலும் படம் முழுக்க வரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 1992ம் ஆண்டு தான் இயக்கிய 'மவுன மழை' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் 'சமரன்' என்ற படத்தில் ராணுவ கமாண்டராக நடித்து வருகிறார். அதோடு 'ஹபீபி' என்ற படத்தில் இஸ்லாமிய குடும்பத் தலைவராக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
ஆனால் அவர் மகன்கள் இயக்கும் படத்தில் நடித்ததில்லை. தன்னை கதை நாயகனாக கொண்டு படத்தின் கதையை எழுதி வைத்துள்ளார். அந்த படத்தை விரைவில் அவர் தொடங்குவார் என்று தெரிகிறது.