ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் டப்பிங் தொழில்நுட்பம் வந்த பிறகு ஏராளமான தெலுங்கு, கன்னட படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரை மலையாள படங்கள் நேரடியாக தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. சில படங்கள் மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி வெளியாகி இருக்கிறது. ஆனால் முதன் முதலாக டப் செய்யப்பட்டு வெளியான முதல் மலையாளப் படம் 'சேச்சி'.
இந்த படம் தமிழில் 'நடிகை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசை குருவான ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைப்பாளராக அறிமுகமானார். டி.ஜானகி ராமன் இயக்கிய இந்த படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ்.குமாரி, ஆரன்முள பொன்னம்மா, எஸ்.பி.பிள்ளை உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
கொச்சின் பிரதர்ஸ் சார்பில் சுவாமி நாராயணன் தயாரித்திருந்தார். 1950ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் அடுத்த ஆண்டு தமிழில் வெளியானது. ஒரு சாதாரண நடுத்தர கும்பத்து பெண் நடிகை ஆவதுதான் படத்தின் கதை.