2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் தனக்கு வாய்ப்பு தர மறுப்பதாக கூறி நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தியன் மூலம் பரபரப்பானவர். தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கும் அவர் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. படத்துக்கு ரெட்டி டயரி என்று பெயர் வைத்துள்ளனர். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜாங்கம் என்பவர் இயக்குகிறார். ரவிதேவன் என்பவர் தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தை தயாரிக்க கூடாது, வெளியிடக்கூடாது என்று தனக்கு மிரட்டல் வருவதாக தயாரிப்பாளர் ரவிதேவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ரெட்டி டைரி படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். படத்தில் உண்மை சம்பவங்கள் அப்படியே இடம் பெறுவதே இதற்கு காணரம். சினிமா வாய்ப்பு தேடும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வழியாக படம் சொல்வதே இந்த மிரட்டலுக்கு காரணம். என்றார்.