மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் தனக்கு வாய்ப்பு தர மறுப்பதாக கூறி நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தியன் மூலம் பரபரப்பானவர். தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கும் அவர் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. படத்துக்கு ரெட்டி டயரி என்று பெயர் வைத்துள்ளனர். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜாங்கம் என்பவர் இயக்குகிறார். ரவிதேவன் என்பவர் தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தை தயாரிக்க கூடாது, வெளியிடக்கூடாது என்று தனக்கு மிரட்டல் வருவதாக தயாரிப்பாளர் ரவிதேவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ரெட்டி டைரி படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். படத்தில் உண்மை சம்பவங்கள் அப்படியே இடம் பெறுவதே இதற்கு காணரம். சினிமா வாய்ப்பு தேடும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வழியாக படம் சொல்வதே இந்த மிரட்டலுக்கு காரணம். என்றார்.