சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவில் இன்று ஜுலை 4ம் தேதியன்று ''3 பிஹெச்கே, அக்கேனம், அனுக்கிரஹன், குயிலி, பறந்து போ, பீனிக்ஸ் வீழான்,” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் '3 பிஹெச்கே, அனுக்கிரஹன், பறந்து போ” ஆகிய படங்களில் அப்பா, மகன் பாசம் என்பது கதையோட்டத்தில் முக்கியமானவை. அதைச் சுற்றித்தான் படத்தின் திரைக்கதை நகரும்.
அவற்றோடு, '3 பிஹெச்கே' படத்திற்கும் 'பறந்து போ' படத்திற்கும் இடையே ஒரு வித்தியாசமான தொடர்பு உள்ளது. '3 பிஹெச்கே' படத்தில் சென்னையில் மூன்று பெட்ரூம் கொண்ட ஒரு அபார்ட்மென்ட்டை வாங்க வேண்டும் என்பதுதான் படத்தில் சரத்குமார் குடும்பத்தின் ஒரு கனவாக இருக்கும். அப்படி ஒரு அபார்ட்மென்ட்டை வாங்க அவர்கள் எத்தனை வருடம், எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
அதேசமயம், அப்படியான அபார்ட்மென்ட் என்ற சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நகர வாழ்க்கையை விட்டு வெளியேறி மலை, மைதானம், இயற்கைக் காற்று, இனிமையான சூழல், நண்பர்கள் சுதந்திரமாக இருங்கள் என்பதுதான் 'பறந்து போ' படத்தின் கதை.
இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் மற்றுமொரு தொடர்பும் உண்டு. '3 பிஹெச்கே' படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா, 'பறந்து போ' படத்தை இயக்கிய ராம்-ன் முன்னாள் உதவி இயக்குனர். அவருடனேயே பல வருடங்கள் பயணித்தவர். இவர்களது இரு வேறு மாறுபட்ட கதையசம் கொண்ட படங்களும் இன்று ஒரே நாளில் வெளிவந்துள்ளது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.
இரண்டு படங்களுமே குடும்பத்து ரசிகர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படங்கள்.