இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
1985ம் ஆண்டு வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'ஆண்பாவம்'. கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜன் 'கன்னிராசி' படத்திற்கு பிறகு இயக்கிய 2வது படம். இந்த படத்தை சிவாஜி நடித்த 'படித்தால் மட்டும் போதுமா', கே.பாக்யராஜ் இயக்கிய 'தூறல் நின்னு போச்சு' ஆகிய இரண்டு படங்களையும் கலந்து உருவாக்கிய படம் தான் ஆண்பாவம்.
அண்ணன் பாண்டியன் பார்க்க வேண்டிய பெண் ரேவதி. ஆனால் அவர் விலாசம் மாறி சீதாவை பெண் பார்த்துவிட்டு திரும்பி விடுவார். அதன்பின் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.
இந்த படத்தில் நடிக்க சீதா முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. பாண்டியன் ஜோடியாக நடிக்க தயங்கினார். ஆனால் நண்பர்களும், சீதாவின் தந்தையும் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்கள். படப்பிடிப்பில் பாண்டியராஜனுக்கு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்தார் சீதா. படத்தின் வெற்றிக்கு பிறகு அதற்காக சீதா மன்னிப்பு கேட்டார்.
இந்த படத்தில் இரண்டாவது கேரக்டரில் ரேவதிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பாண்டியராஜன். அப்போது ரேவதி பயங்கர பிசியாக இருந்தார். என்றாலும் பாண்டியராஜனுக்காக மனமிறங்கி மற்ற தயாரிப்பாளர்களிடம் பேசி 5 நாள் கால்ஷீட் தருகிறேன் என்று சொன்னார். அதன்பிறகு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தார் பாண்டியராஜன், ரேவதி வரும் முக்கியமான காட்சிகளை 5 நாட்களில் எடுத்து விட்டு அதன்பிறகு எடுத்த காட்சிகளை வைத்து படம் முழுக்க அவரது கேரக்டரை கொண்டு வரும் வகையில் மாற்றம் செய்தார்.
ரேவதி 5 நாட்கள் நடித்துக் கொடுத்தார். ஒரு பாடல் காட்சி தவிர எடுக்கப்பட்ட காட்சிகள் வெறும் 6 தான். ஆனாலும் படம் முழுக்க அந்த கேரக்டரை கொண்டு சென்றார் பாண்டியராஜன். குறிப்பாக ரேவதி கிணற்றுக்குள் விழுவதில் இருந்து அவர் குணமாகி வரும் வரை 5 காட்சிகள் வரும். ஆனால் அந்த காட்சிகளில் ரேவதி நடிக்கவில்லை. ஆனால் அவர் பிரேமில் இருப்பது போன்று படமாக்கினார். படம் வெளியானதும், 40 நாள் நடித்த சீதா கேரக்டரை விட 5 நாள் நடித்த ரேவதி கேரக்டரே பேசப்பட்டது.