'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
அஜய்தீஷன் நடிக்கும் ‛பூக்கி' படத்தில் முக்கியமான வேடத்தில் வருகிறார் நடிகர் பாண்டியராஜன். அவர் பேசுகையில், ‛‛இந்த படத்தில் நடித்தபோது முழு சம்பளமும் டக்கென வந்தது. இளைஞர்களுடன் பணியாற்றுவது நல்ல அனுபவம். நான் படம் இயக்கப்போகிறேன் என்று என் குருநாதர் கே.பாக்யராஜிடம் சொன்ன நினைவுகள் வந்தது. ஒரு நள்ளிரவு இதை சொல்லி, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அப்போது அவர் 'படம் டைரக்டர் செய், ஆனா, டைரக்ட் பண்ணுவதாக நடிக்காதே' என எனக்கு அட்வைஸ் செய்தார்.
சில இயக்குனர்கள் நாம் இயக்குனர், செட்டில் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக சவுண்டுவிடுவார்கள். கடுமையாக வேலை செய்வது போல காண்பிப்பார்கள். அதெல்லாம் தேவையில்லை. பிரேமில் என்ன வருகிறது என்பதற்காக உழைக்க வேண்டியதுதான் டைரக்டர் பொறுப்பு, வெளியில் டைரக்டராக நடிக்க தேவையில்லை. இப்போதுள்ள இயக்குனர்கள் சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள்''என்றார்.
இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சுந்தரா டிராவல்ஸ் ராதா, ''என்னுடைய சின்ன வயதில் பாண்டிராஜன் சாரை பார்த்தது நினைவுக்கு வருகிறது. அவர் என்னை வைத்து டெஸ்ட் சூட் எடுத்தார். கேமரா, குடைகள் வந்தது என்னை போட்டோ எடுத்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். பல ஆண்டுகள் படத்தில் அவர் நடிக்கும் படத்திலும் நானும் இருப்பது மகிழ்ச்சி'' என்றார்.