ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
'தக்லைப்' படத்தின் தோல்வி கமலை ரொம்பவே பாதித்துள்ளது. குறிப்பாக, அவர் படங்களின் வியாபாரத்தை பாதித்துள்ளது. அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் கமல். அந்த படம் சின்ன பட்ஜெட்டில் உருவாகிறது. 'விக்ரம், தக்லைப்' மாதிரி பெரிய பட்ஜெட் கதை அல்ல என்கிறார்கள். அடுத்து 'சித்தா, வீர தீர சூரன், சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிறார்கள். அதுவும் சின்ன பட்ஜெட் படம்தான்.
தக்லைப் தோல்வி காரணமாக பெரிய பட்ஜெட் படம் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறாராம் கமல்ஹாசன். இதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தபின் அவரை வைத்து படம் எடுக்க பல நிறுவனங்கள் தயங்குகின்றன. அதனால், தனது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அதிகம் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இன்றைய சூழ்நிலையில் பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து அது தோல்வி அடைந்தால் அது தனது நிறுவனத்தையும் பாதிக்கும் என்று நினைக்கிறாராம். அதேசமயம், ராஜ்கமல் தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' பெரிய வெற்றி பெற்றது. பல கோடி லாபத்தை அள்ளி தந்தது. மற்ற கமர்ஷியல் ஹீரோ கால்ஷீட் கொடுத்தால் அந்த மாதிரி படத்தையும் தயாரிக்க கமல் தரப்பு தயாராம்.