சுரேஷ் கோபி பட டைட்டிலை சென்சார் மாற்ற சொன்னதன் காரணம் இதுதான் | ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசனின் எக்ஸ் கணக்கு | கிச்சா சுதீப்பின் பேச்சுக்கு கர்நாடக துணை முதல்வர் பதில் | ‛பேட்ரியாட்' டைட்டிலை உறுதி செய்த மோகன்லால் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது : நீதிமன்றத்தில் கேரள போலீஸார் மனு | குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன் : போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர் | திருக்குறள் படத்தை முதல்வர் பார்ப்பாரா? | நியூயார்க் திரைப்பட விழாவில் அங்கம்மாளுக்கு கவுரவம் | ஏமாற்றிய 'ஏஸ்', மயக்க வைக்குமா 'மதராஸி' | தமிழில் வரவேற்பு இல்லை என்றாலும் 100 கோடி வசூலில் 'குபேரா' |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள திகில் கலந்த புராண படமான ‛மா' வரும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான புரொமோஷனில் பிஸியாக இருந்த கஜோலை சந்தித்தபோது அவர் அளித்த பேட்டி....
‛மா' என்ற படத்தின் தலைப்பு ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டதா?
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது தற்காலிகமாக தான் ‛மா' என தலைப்பு வைத்திருந்தோம். பின்னர் படம் தயாரானபின் அது என்ன சொல்கிறது, எதை பற்றி பேசுகிறது என பார்த்தோம். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரமான காளி மற்றும் படத்தில் காட்டப்படும் தாயின் கதை ஆகியவற்றுக்கு ‛மா' என்ற தலைப்பே மிகவும் பொருத்தமாக இருந்ததை உணர்ந்து அதையே தலைப்பாக்கி விட்டோம்.
படப்பிடிப்பில் எது உங்களுக்கு சவாலாக இருந்தது?
படம் முழுக்கவே எனக்கு சவாலாக இருந்தது. ஆனாலும் ஆக் ஷன் காட்சிகள் தான் படத்தில் மிகவும் சவாலாக அமைந்தது. காரணம் என் சினிமா பயணத்தில் முதன்முறையாக ஆக் ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். முன்பெல்லாம் ஆக் ஷன் காட்சிகளில் என்ன இருக்கிறது என நினைத்தது உண்டு. ஆனால் அதை நான் செய்யும் போது தான் அதில் உள்ள சிரமங்களை உணர்ந்தேன். இப்போது எல்லா ஆக் ஷன் ஹீரோக்கள் மீதும் குறிப்பாக எனது கணவர் அஜய் தேவ்கன் மீதும் எனது மரியாதை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில், அவர் பல ஆக் ஷன் படங்களில் நடித்துள்ளார்.
ஆக் ஷன் காட்சிகளில் நடிக்க அஜய் தேவ்கன் எதுவும் டிப்ஸ் தந்தாரா...?
இல்லை, அவர் எந்த டிப்ஸும் தரவில்லை. ஆனால் படத்தில் எனது ஆக் ஷன் காட்சிகளை பார்த்துவிட்டு நான் நன்றாக செய்திருப்பதாகவும், இவ்வளவு சிறப்பாக நான் ஆக் ஷன் செய்வேன் என எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
இன்றைய காலத்தில் ஒரு குழந்தைக்கு தாயின் பொறுப்பு மாறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
என்னை பொருத்தவரை எதுவும் மாறவில்லை. முன்பு இருந்தது இப்போதும் உள்ளது. இன்னமும் மக்கள், நீங்கள் தவறு செய்தால் உங்கள் தாய் எதுவும் செல்லவில்லையா என்று கூறுவார்கள். மற்றவர்களை மதிக்க வைப்பது ஒரு தாயின் பொறுப்பு. இன்றைய காலத்தில் தாய் மட்டுமல்ல, தந்தையும் சேர்ந்து குழந்தைகளுக்கு சரி மற்றும் தவறை கற்பிக்கிறார்கள் என்றே உணர்கிறேன்.
இவ்வாறு கஜோல் தெரிவித்தார்.