'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! | பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான ஆடியோ |
மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்த 'டெஸ்ட்' படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது அவர் நடித்துள்ள இந்திப் படமான 'ஆப் ஜெய்சா கோய்' (உன்னைப் போல் ஒருவர்). என்ற படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. நடுத்தர வயது நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? என்பதுதான் படத்தின் கதை. கதைநாயகனாக ஸ்ரீரேணு திரிபாதி என்ற கேரக்டரில் மாதவனும், அவரது மனைவி மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கிறார்கள்.
விவேக் சோனி இயக்கியுள்ள இந்தப் படத்தை தர்மாடிக் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஆயிஷா ராசா, மணீஷ் சவுத்ரி மற்றும் நமித் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 11ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
படம் குறித்து மாதவன் கூறும்போது "நான் இதற்கு முன்பு நடித்த எந்தவொரு காதல் கதையையும் போல 'ஆப் ஜெய்சா கோய்' இல்லாமல் முழுக்க முழுக்க மனித மனங்களைச் சார்ந்தது. நான் நடித்த மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஸ்ரீரேணுவும் ஒருவர். கம்பேனியன்ஷிப்பிற்காக ஏங்கும் ஒருவர். ஆனால், அதை எப்படிக் கேட்பது என்று கூட தெரியாத உள்ளுக்குள் அதிக உணர்ச்சிவசப்பட்டவர்.
இந்தப் படம் அதிரடியாக இருக்காது. ஆனால் பொறுமையாகவும், மென்மையாகவும் பார்ப்பவர்களை ஆழமாகப் பாதிக்கும் வகையிலும் இருக்கும். வாழ்க்கையிலோ அல்லது காதலிலோ புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்களிடம் இது எவ்வாறு பேசுகிறது என்ற கருவால் நான் ஈர்க்கப்பட்டேன். 'ஆப் ஜெய்சா கோய்' சொந்த விதிமுறைகளின்படி வாழத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையில்லை, நீங்கள் எப்போது வேண்டுமானலும் வாழத் தொடங்கலாம் என்பதை அழுத்தமாக பேசும் கதை” என்றார்.