லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. கார்த்தி, எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ள இந்த படம் ஒரு பேண்டஸி கதை களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 160 நாட்கள் படமாக்கினர். ஆனால், இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை. இதற்கிடையில் இந்த படத்திற்கு திடீர் பண சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். இப்போது பிரச்னைகள் முடிவடைந்தது மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து இவ்வருட செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.