கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‛இருவர்' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‛ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன்' என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், சமீபகாலமாக ஓரளவு வெயிட் போட்டு காணப்படுவதால் சோசியல் மீடியாவில் அவரை பலரும் உருவ கேலி செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛கடந்த 2011ம் ஆண்டு எனது மகள் பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது. ஆனால் இதை வைத்து பலரும் பலதரப்பட்ட கேள்வி எழுப்புகிறார்கள். உடல் எடை கூடியதற்கு என்ன காரணம்? ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். என் மீது இவர்களுக்கு ஏன்தான் இத்தனை அக்கறையோ தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த பதிலும் கொடுக்க நான் விரும்பவில்லை. என்னுடைய எடையை நினைத்து நான் ஒருபோதும் பீல் பண்ணியதில்லை. அதேபோல் என் உடல் எடையை வைத்து யார் என்னை எப்படி விமர்சித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதுமில்லை'' என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.