'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

நடிகர் மணிகண்டன், நடன இயக்குனர் மற்றும் நடிகர் சாண்டி ஆகிய இருவரும் தமிழக அரசின் கலைமாமணி விருதை சில தினங்களுக்கு முன்பு பெற்றனர். பல வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சினிமாவுக்கு வாய்ப்பு தேடி அலைந்த காலத்திலிருந்து தற்போது வரை அவர்களது நட்பு இனிதாய் தொடர்கிறது. இருவரும் ஒரே நாளில் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளனர்.
அது குறித்து மணிகண்டன் இன்ஸ்டா தளத்தில், “நாங்கள் ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம். நாங்கள் ஒரே அளவிலிருந்து தொடங்கினோம். ஆனால் வெவ்வேறு பாதைகளில் நடந்தோம். நாங்கள் எங்கள் கனவில் வேரூன்றி நீண்ட தூரம் வந்துள்ளோம். இன்று நாங்கள் இந்த மேடையில் ஒன்றாக நிற்கிறோம்... வெற்றியின் ஒளியில் கலைமாமணி விருதைப் பகிர்ந்து கொண்டு எங்கள் பயணங்கள் வெவ்வேறு, ஆனால் இலக்கு ஒன்று. காலம் நமக்கு நினைவூட்டுகிறது ... நட்பு தூரத்தால் அல்லது போராட்டங்களால் மங்காது, அனைத்தின் மூலமாக…..” என்று தன்னம்பிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
மணிகண்டன் தமிழ் சினிமாவில் சமீப காலமான நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து முன்னேறி வருகிறார். சாண்டி, நடன இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்து வருகிறார். 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 'லோகா' படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.




