2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் மணிகண்டன், நடன இயக்குனர் மற்றும் நடிகர் சாண்டி ஆகிய இருவரும் தமிழக அரசின் கலைமாமணி விருதை சில தினங்களுக்கு முன்பு பெற்றனர். பல வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சினிமாவுக்கு வாய்ப்பு தேடி அலைந்த காலத்திலிருந்து தற்போது வரை அவர்களது நட்பு இனிதாய் தொடர்கிறது. இருவரும் ஒரே நாளில் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளனர்.
அது குறித்து மணிகண்டன் இன்ஸ்டா தளத்தில், “நாங்கள் ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம். நாங்கள் ஒரே அளவிலிருந்து தொடங்கினோம். ஆனால் வெவ்வேறு பாதைகளில் நடந்தோம். நாங்கள் எங்கள் கனவில் வேரூன்றி நீண்ட தூரம் வந்துள்ளோம். இன்று நாங்கள் இந்த மேடையில் ஒன்றாக நிற்கிறோம்... வெற்றியின் ஒளியில் கலைமாமணி விருதைப் பகிர்ந்து கொண்டு எங்கள் பயணங்கள் வெவ்வேறு, ஆனால் இலக்கு ஒன்று. காலம் நமக்கு நினைவூட்டுகிறது ... நட்பு தூரத்தால் அல்லது போராட்டங்களால் மங்காது, அனைத்தின் மூலமாக…..” என்று தன்னம்பிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
மணிகண்டன் தமிழ் சினிமாவில் சமீப காலமான நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து முன்னேறி வருகிறார். சாண்டி, நடன இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்து வருகிறார். 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 'லோகா' படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.