300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பாலிவுட்டில் கடந்த 2000ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‛ஹேரா பெரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 2006ல் இரண்டாம் பாகமாக உருவாகி வெளியானது. அதன் பிறகு தற்போது இதன் மூன்றாம் பாகம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் குணசித்திர நடிகர் பரேஷ் ராவல் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. முந்தைய இரண்டு பாகங்களிலும் இவர்கள்தான் நடித்திருந்தனர். இந்த நிலையில் படக்குழுவினர் யாரிடமும் எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார் பரேஷ் ராவல். இது படக்குழுவினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான அக்ஷய் குமார், நடிகர் பரேஷ் ராவலிடம் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பரேஷ் ராவல், என்னுடைய வழக்கறிஞர் என்னுடைய விலகல் மற்றும் வெளியேற்றம் குறித்து மிகச்சரியான ஒரு விளக்க நோட்டீசை அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய தரப்பு பதிலை அவர்கள் படித்தார்கள் என்றால் அனைத்து பிரச்சினைகளும் அப்போதே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இருந்து பரேஷ் ராவல் விலகியதற்கு சம்பளப் பிரச்சனையும் காரணம் இல்லை, கதை குறித்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதை நேரடியாக சொல்லாமல் இப்படி திடீரென விலகி அதற்காக ஒரு விளக்க கடிதம் எழுதி வக்கீல் நோட்டீஸாக அனுப்பியிருப்பது பாலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.