பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‛இருவர்' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‛ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன்' என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், சமீபகாலமாக ஓரளவு வெயிட் போட்டு காணப்படுவதால் சோசியல் மீடியாவில் அவரை பலரும் உருவ கேலி செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛கடந்த 2011ம் ஆண்டு எனது மகள் பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது. ஆனால் இதை வைத்து பலரும் பலதரப்பட்ட கேள்வி எழுப்புகிறார்கள். உடல் எடை கூடியதற்கு என்ன காரணம்? ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். என் மீது இவர்களுக்கு ஏன்தான் இத்தனை அக்கறையோ தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் யாருக்கும் எந்த பதிலும் கொடுக்க நான் விரும்பவில்லை. என்னுடைய எடையை நினைத்து நான் ஒருபோதும் பீல் பண்ணியதில்லை. அதேபோல் என் உடல் எடையை வைத்து யார் என்னை எப்படி விமர்சித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதுமில்லை'' என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.




