அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவரது யூடியூப் சேனலில் ஒரு பாட்கேஸ்ட் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விருதுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அது பைத்தியக்காரத்தனம். நான் தேசிய விருதுகளையும் சேர்த்து தான் கூறுகிறேன். 7 கோடி மக்களுக்கும் சேர்த்து இவர் தான் சிறந்த நடிகர், இதான் சிறந்த படம் சொல்ல இவங்க என்ன மேதாவிகளா?
நீங்கள் சர்வே எடுங்கள், மக்கள் சர்வே தான் முக்கியம். நீங்க 8 பேரு முடிவு செய்வது தான் புல் சிட். எனக்கு விருதுகள் தராததால் இதை நான் கூறவில்லை. நான் விருது வாங்கினாலும், போகும் வழியில் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவேன், அது தங்கமாக இருந்தால் அடகு வைத்து அந்தப் பணத்தில் அன்னதானம் செய்வேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.