இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஏஆர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தார். 28 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களின் பிரிவு திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் உடன் ரஹ்மான் நேரத்தை செலவிட முடியாதது, சாய்ரா பானுவிற்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு என இவர்கள் பிரிவு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். ரஹ்மானிடம் தொகுப்பாளினி டிடி யாரிடமாவது ஒருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டார். அதற்கு ரஹ்மான், ‛‛எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கணும். குறிப்பாக என் மகள், மகன் உள்ளிட்ட குடுபத்தினரிடமும், முன்னாள் மனைவி சாய்ராவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வேலை வேலை என இருந்துவிட்டதால் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றார். மேலும் என் உசுரே ரசிகர்கள் தான், அவர்கள் இல்லையென்றால் என் வண்டி ஓடாது" என தெரிவித்தார்.