300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையே ஏற்பட்டுள்ள பிரிவு பிரச்னையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண், என்னை வசைபாடுபவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார் பாடகி கெனிஷா.
நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்துவிட்டார். அவரிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார் ரவி மோகன். இதை வைத்து ஆர்த்தி, ரவி மோகன், ஆர்த்தியின் அம்மா, தயாரிப்பாளர் சுஜாதா ஆகியோர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆர்த்தி வெளியிட்ட கடைசி அறிக்கையில், ‛நாங்கள் பிரிய எங்கள் வாழ்வில் வந்த அந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என பாடகி கெனிஷாவை மறைமுகமாக சாடியிருந்தார். இதை வைத்து கெனிஷாவை பலரும் வலைதளங்களில் சகட்டுமேனிக்கு திட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
அந்த கருத்துக்கள் சிலவற்றை கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் உடன், ‛‛நடந்த பிரச்னைகளுக்கு நான் தான் காரணம் என ஒருவர் பொய்யாக பேசுவதை நம்பினால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள். அங்கு உண்மை தெரியவரும். எனக்கு எதிராக பொய்யான வெறுப்புகளை மட்டுமே பரப்புகிறார்கள். தயவு செய்து அவற்றை நிறுத்துங்கள். நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.
என்னைப் பற்றி நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், சாபங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள், உடல்ரீதியான அவமானங்கள், கொலை மிரட்டல்கள் போன்றவற்றால் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என யோசித்து பார்த்து இருக்கிறீர்களா. கர்மா பற்றி பேசுகிறார்கள். ஆனால் பலருக்கு என்ன நடக்கிறது என பார்க்க நான் விரும்பவில்லை. நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன். இவை எல்லாவற்றையும் அவரிடம் விட்டுவிடுகிறேன். நான் அவரிடம் சரணடைகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.