ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படை தலைவன் படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா, ஏஆர் முருகதாஸ் சசிகுமார் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது.
படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் சரியான திரை அரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், கிட்டதட்ட 10 கோடி ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேமலதா தரப்பில் படம் வெளிவந்தே ஆக வேண்டும் என கூறுகிறாராம். ஆனால் நிலவும் சூழ்நிலைகளை பார்த்தால் படம் அடுத்த வாரம் தான் வெளியாகும் என தெரிகிறது. இருப்பினும் படத்தை ரிலீஸ் செய்ய முக்கியஸ்தர்கள் பலரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பல படங்கள் வெளிவர உதவியாக இருந்த விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டில் சிலர் வருத்தமாக பேசுவதை கேட்க முடிகிறது.