ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
அன்பு இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படை தலைவன் படம் வரும் மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அத்தனை வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்பட இசை வெளியீட்டு விழாவில் பிரேமலதா, ஏஆர் முருகதாஸ் சசிகுமார் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது.
படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் சரியான திரை அரங்குகள் கிடைக்காத காரணத்தினாலும், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேமலதா தரப்பில் படம் வெளிவந்தே ஆக வேண்டும் என கூறுகிறாராம். ஆனால் நிலவும் சூழ்நிலைகளை பார்த்தால் படம் அடுத்த வாரம் தான் வெளியாகும் என தெரிகிறது. இருப்பினும் படத்தை ரிலீஸ் செய்ய முக்கியஸ்தர்கள் பலரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பல படங்கள் வெளிவர உதவியாக இருந்த விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா என்று கோலிவுட்டில் சிலர் வருத்தமாக பேசுவதை கேட்க முடிகிறது.