முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் |
'விஸ்வாம்பரா' படத்தை அடுத்து அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், இன்னொரு நாயகியாக கேத்ரின் தெரசாவும் கமிட்டாகி இருக்கிறார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கரு பொருளுடன் கூடிய ஒரு போட்டோஷூட்டை அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடத்தி உள்ளார்கள். படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாறி எடுத்துள்ள இந்த புகைப்படம் சிரஞ்சீவிக்கு பெரிய அளவில் திருப்தி கொடுத்திருக்கிறதாம். மேலும் காமெடி கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவி, நயன்தாராவுக்கு இடையே அதிகப்படியான காமெடி காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த அணில் ரவிபுடிதான் கடந்த ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியான, 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். அப்படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருந்தார்கள்.