ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஷால் திரைப்படங்களில் நடிப்பதோடு, தனது அறக்கட்டளை நடத்தும் பல விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் 'மதகஜராஜா' விழாவில் கலந்து கொண்டபோது கை நடுக்கத்துடன் காணப்பட்டார், கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால், மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரவியது. இது குறித்து விஷால் அளித்துள்ள விளக்கத்தில் "மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை 5 வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன்.
நான் பார்ட்டிக்கே போவது கிடையாது. நான் கடைசியாக சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேண்டுமென்றாலும் பேசுகிறார்கள். இது என்னை பாதிக்கவும் செய்யாது. நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி'', என்று கூறியிருக்கிறார்.