நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? | 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் | பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் | இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் | சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி |
விழுப்புரம் கூவாகம் திருநங்கைகள் அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்ற நடிகர் விஷால் திடீரென மயக்கம் அடைந்தது, நேற்று இரவு பரபரப்பு செய்தியானது. அவர் உடலுக்கு பழைய படி பிரச்னையா? அவர் எப்படி இருக்கிறார் என கோலிவுட்டில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அவர் தரப்போ, ''காலையில் இருந்து சரியாக சாப்பிடவில்லை. ஜூஸ் மட்டுமே குடித்தார். நீண்ட பயணம், கூட்டம் அதிகம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது. டாக்டர்கள் பார்த்துவிட்டு ஒன்றுமில்லை. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்'' என அட்வைஸ் செய்ததாக கூறியது.
உடல் எடை பிரச்னை, டயட் காரணமாக பல ஆண்டுகளாக விஷால் அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை. வேறு வகையான டயட் உணவுகளை சாப்பிடுகிறார். அதனால், சரியாக சாப்பிடாததால் அவர் வீக் ஆகிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
அடுத்து ரவி அரசு இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் விஷால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இயக்குனர் கவுதம்மேனனும் விஷாலை வைத்து படம் பண்ண முயற்சித்து வருகிறார்.