ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
நாசர், விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்பிற்கு வந்த பின்னர் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது பேசிய விஷால் 'கட்டிடப் பணிகள் விரைவில் முடியும், அங்கு அமையும் பிரமாண்ட அரங்கத்தில்தான் எனது திருமணம் நடக்கும், அதுவரை எனது திருமணம் நடக்காது' என்றார்.
சொன்னபடி இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் இடையில் ஐதரபாத்தை சேர்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த திருமணம் நின்று போனது. உங்கள் சவால் எங்கே போனது என்று அப்போது விஷாலை ட்ரோல் செய்தார்கள்.
இப்போது மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி உள்ளார். நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும். கட்டிடப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நடிகர் சங்கம் கட்டப்பட்டதற்கு பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். அதில் உறுதியாக இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக கட்டப்பட்ட கட்டிடம். எனவே அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தரவேண்டும் வாசலில் இருந்து வரவேற்கும் முதல் ஆளாக நான் காத்திருப்பேன்' என்றார்.