இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
நாசர், விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்பிற்கு வந்த பின்னர் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது பேசிய விஷால் 'கட்டிடப் பணிகள் விரைவில் முடியும், அங்கு அமையும் பிரமாண்ட அரங்கத்தில்தான் எனது திருமணம் நடக்கும், அதுவரை எனது திருமணம் நடக்காது' என்றார்.
சொன்னபடி இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் இடையில் ஐதரபாத்தை சேர்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த திருமணம் நின்று போனது. உங்கள் சவால் எங்கே போனது என்று அப்போது விஷாலை ட்ரோல் செய்தார்கள்.
இப்போது மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி உள்ளார். நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும். கட்டிடப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நடிகர் சங்கம் கட்டப்பட்டதற்கு பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். அதில் உறுதியாக இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக கட்டப்பட்ட கட்டிடம். எனவே அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தரவேண்டும் வாசலில் இருந்து வரவேற்கும் முதல் ஆளாக நான் காத்திருப்பேன்' என்றார்.