ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
நாசர், விஷால் தலைமையிலான அணியினர் பொறுப்பிற்கு வந்த பின்னர் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது பேசிய விஷால் 'கட்டிடப் பணிகள் விரைவில் முடியும், அங்கு அமையும் பிரமாண்ட அரங்கத்தில்தான் எனது திருமணம் நடக்கும், அதுவரை எனது திருமணம் நடக்காது' என்றார்.
சொன்னபடி இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் இடையில் ஐதரபாத்தை சேர்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்க இருந்த நிலையில் அந்த திருமணம் நின்று போனது. உங்கள் சவால் எங்கே போனது என்று அப்போது விஷாலை ட்ரோல் செய்தார்கள்.
இப்போது மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி உள்ளார். நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும். கட்டிடப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியது போல நடிகர் சங்கம் கட்டப்பட்டதற்கு பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். அதில் உறுதியாக இருக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக கட்டப்பட்ட கட்டிடம். எனவே அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தரவேண்டும் வாசலில் இருந்து வரவேற்கும் முதல் ஆளாக நான் காத்திருப்பேன்' என்றார்.