இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
அஜித் கடந்த பல வருடங்களாக எந்த பட புரமோசனிலும் கலந்து கொள்ளவில்லை, எந்த மீடியாவையும் சந்தித்தில்லை. ஆனால் சமீபகாலமாக அவரது செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளின் போது அங்குள்ள சில மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தார். சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்றார். அதன்பின் டில்லியில் அவர் சில மீடியாக்களில் பேட்டி கொடுத்தார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : எனது இளமை காலத்தில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என்று எனது அப்பா சொன்னது நினைவில் இருக்கிறது. இந்த போட்டியில் நீ கலந்து கொள்ள என்னால் பணம் கொடுக்க முடியாது. இதில் உனக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று எனக்கு தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடி என சொன்னார். அந்த சமயம் மாடலிங்கில் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் எனக் ஒருவர் விசிட்டிங் கார்டு கொடுத்தார். மாடலிங் என்ன என்று புரியும் முன்பே சினிமா வாய்ப்பு வந்தது. மாடலிங், விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த எல்லா பணத்தையும் நான் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக செலவு செய்தேன்.
'வாலி' எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். அது என்னை ஒரு தொழில்முறை நடிகராக்கியது. மக்கள் மத்தியில் இருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. இந்த படம் தான் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டது. நான் ஆக்ஸிடென்டல் நடிகன்தான். எப்போது ஓய்வு பெறுவேன் என திட்டமிடவில்லை. ஆனால் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். எதுவும் நிரந்தரம் இல்லை.
தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியலில் எந்தவொரு ஆசையும் இல்லை. எனது சக நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளது என்பது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அரசியலுக்கு வரப்போவதாக பேசுகிறார்கள். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பால் தான் இருந்துள்ளேன். எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பேசும்போது கூட அரசியல் குறித்துப் பேசமாட்டேன். இது தெளிவாக நானே எடுத்த முடிவுதான். வரும் காலத்திலும் அது அப்படியே இருக்கும். மாநில அரசியலாக இருந்தாலும், தேசிய அரசியலாக இருந்தாலும் எனது நட்பு வட்டாரத்திலேயே அது குறித்து சீக்கிரம் பேச மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் அரசியலுக்கு எப்போதுமே 'நோ' தான்.
இவ்வாறு அஜித் பேட்டி அளித்துள்ளார்.