சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
இந்திய அளவில் திரையுலக வசூலை 1000 கோடி என அசத்தலாக தூக்கி நிறுத்திய படங்களாக தென்னிந்தியப் படங்களான 'பாகுபலி 2, கேஜிஎப் 2, கல்கி 2898 எடி, புஷ்பா 2' ஆகிய படங்கள் அமைந்தன. அப்படங்கள் வழக்கமான படங்களை விடவும் மாறுபட்ட பிரம்மாண்டமான படங்களாக இருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அப்படியான படங்கள் பற்றி வேவ்ஸ் 2025 மாநாட்டில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. “'புஷ்பா 2' போன்ற படங்கள் தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே அதிக வசூலைக் குவித்தது. பெரிய திரையில் வெளிப்படும் மாயாஜாலத்தை அனுபவிப்பதற்காக 'புஷ்பா, கேஜிஎப், பாகுபலி' போன்ற படங்களை 100ல் 90 பேர் பார்க்கிறார்கள். புஷ்பா ராஜ், ராக்கி பாய், பாகுபலி போன்ற இயல்புக்கு மீறிய ஹீரோக்களைப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். தனிப்பட்ட விதத்தில் நானும் அத்தகைய படங்களையும் ஹீரோக்களையும் பார்க்க விரும்புகிறேன்.
அனைத்து படங்களும் ஹீரோ கதாபாத்திரங்களால் மட்டுமல்லாது வலுவான உள்ளடக்கத்தாலும் வெற்றி பெற்றுள்ளன. ராஜமவுலி கூட 'பாகுபலி' படத்தைத் தெலுங்கில்தான் உருவாக்கினார். ஆனால், அவை சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றார்,” என்று குறியுள்ளார்.