சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கூலி படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸாகிறது. அடுத்த ஆண்டு ஜெயிலர் 2 வெளியாகலாம். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி படத்தை தயாரிக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக இருக்கிறது. கிட்டத்தட்ட அந்த டீல் முடிந்துவிட்டது. விரைவில் முறைப்படி அறிவிப்பு என்கிறார்கள். சரி, இயக்குனர் யார் என்று விசாரித்தால் ஏகப்பட்டபேர் லைனில் இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் முதலில் இருக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், இப்போது சுந்தர்.சியும் போட்டிக்கு வந்துவிட்டாராம்.
ரஜினியை வைத்து அருணாசலம்( 1997) படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. இப்போது வேல்ஸ் நிறுவனத்துடன் நல்ல நட்பில் இருக்கிறார். அவர்கள் தயாரிக்கும் மூக்குத்திஅம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அந்த அடிப்படையில் அவரும் களம் குதிக்க, இன்னமும் ரஜினி யார் இயக்குனர் என்று முடிவெடுக்கவில்லையாம்.