ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
விஜய், அஜித் தமிழ் மீடியாவிடம் பேசி பல ஆண்டுகள் ஆச்சு. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது தங்கள் படங்கள் வெளியாகும் சமயத்தில் இவர்கள் பேசி வந்தனர். அசல் படத்துக்கு பின் மீடியாவினருடன் பேசுவதை அஜித் நிறுத்திவிட்டார். எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். (கார் ரேஸ் குறித்து துபாயில் சமீபத்தில் ஓரிரு பேட்டி தந்தார். டில்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிவிட்டு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். விஜய் வேலாயுதம் படத்துக்குபின் நிருபர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார்.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது மட்டும் சில டிவிகளுக்கு பேட்டி கொடுத்தார். மற்றபடி, மேடையில் பேசுவதுடன் சரி. இந்நிலையில் இருவரும் சென்னை ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்துள்ளனர். பத்ம பூஷன் விருது வாங்கிவிட்டு சென்னை வந்த அஜித், ஏர்போர்ட் வாசலில் மீடியாவிடம் சில வார்த்தைகள் பேசினார். ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரை செல்லும் முன்பு சென்னை ஏர்போர்ட் வாசலில் விஜய் பேட்டி கொடுத்துள்ளார். இருவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மீடியா, ரசிகர்கள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாற்றம் தொடருமா?