வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் |
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நடிப்பில் சமீபத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகாமல் இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் கூட இதற்கான புரமோஷனில் எந்த குறையும் வைக்காமல் இதில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். புரமோஷன் என்றாலே தள்ளிப்போகும் நயன்தாரா கூட இந்த படத்திற்காக தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மின் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மீரா ஜாஸ்மினும் நயன்தாராவும் ஒரே ஊரை (கேரளாவில் உள்ள திருவல்லா) சேர்ந்தவர்கள் தான். ஒரே கல்லூரியில் வெவ்வேறு காலகட்டங்களில் படித்தவர்கள். குறிப்பாக மீரா ஜாஸ்மின் உறவுப்பெண் ஒருவர் நயன்தாராவுடன் ஒரே வகுப்பில் இணைந்து ஒன்றாக படித்தவர்.
மீரா ஜாஸ்மின் பற்றி நயன்தாரா கூறும்போது, “நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் மீரா ஜாஸ்மின் பற்றி தான் எங்கும் பேச்சாக இருக்கும். அவரது உறவுக்கார பெண் ஒருவர் என்னுடைய வகுப்பில் தான் படித்தார். என்னுடன் கூடவே அமர்ந்து கொண்டு இருப்பார். எப்போது பார்த்தாலும் மீராஜாஸ்மின் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறார்.. பாடல் காட்சிகள் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தினசரி அவரைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தியை பெருமையாக பேசிக் கொண்டிருப்பார். எனக்கும் அதை எல்லாம் கேட்கும் போது பிரமிப்பாகவே இருக்கும்.
நான் 2002ல் சினிமாவில் அடி எடுத்து வைத்த காலகட்டத்தில் மீரா ஜாஸ்மின் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். அவர் பெயர் தினசரி என் காதுகளில் விழாத நாட்களே இல்லை. அந்த வகையில் எனக்குள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த மீரா ஜாஸ்மின் ஒரு காரணமாகவே இருந்தார்” என்று கூறியுள்ளார் நயன்தாரா.