சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சிம்பொனி இசை அரங்கேற்றி சாதித்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜுன் 2ல் அவரின் பிறந்தநாளில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றி அசத்தினார். இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி இருந்த முதல்வர் ஸ்டாலின், ‛‛இளையராஜாவின் சிம்பொனி இசை சாதனை, அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணம் ஆகியவற்றுக்காக அரசின் சார்பில் விழா நடத்தப்படும்'' என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜுன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்தநாள். அந்த நாளிலேயே அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 27) அறிவித்தார்.