துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிம்பொனி இசை அரங்கேற்றி சாதித்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜுன் 2ல் அவரின் பிறந்தநாளில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றி அசத்தினார். இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி இருந்த முதல்வர் ஸ்டாலின், ‛‛இளையராஜாவின் சிம்பொனி இசை சாதனை, அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணம் ஆகியவற்றுக்காக அரசின் சார்பில் விழா நடத்தப்படும்'' என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜுன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்தநாள். அந்த நாளிலேயே அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 27) அறிவித்தார்.