ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் | 8 ஆண்டுகளாக நான் நினைத்ததை பேச சுதந்திரம் இல்லை : திலீப் வேதனை | எதிர்ப்புக்கு பணிந்த சந்தானம், ஆர்யா : சர்ச்சைக்குரிய 'கோவிந்தா...' பாடல் நீக்கம் | பேய்ப் படமா? பாசப் படமா? : ரசிகர்கள் ஆதரவு எந்தப் படத்திற்கு ? | தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் ஜுனியர் என்டிஆர்? | ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தில் விக்ரம்? | பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'தக் லைப்' ? |
அந்த காலத்தில் ஆண்களே பெரும்பாலும் கதை நாயகர்களாக நடித்தார்கள். பெண்கள் கதையின் நாயகியாக அதாவது சோலோ ஹீரோயினாக நடிப்பது அபூர்வம். அப்படி நடித்தாலும் அது புராண கதாபாத்திரமாக இருக்கும். இப்படியான ஒரு காலகட்டத்தில் வி.என்.ஜானகி 'தியாகி' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணாக. ராம்ஜிபாய் ஆர்யா இயக்கினார்.
ஜானகியுடன் என். கிருஷ்ணமூர்த்தி, வி.எஸ். மணி, 'ஸ்டண்ட்' சோமு, கே.தேவநாராயணன், கே.எஸ்.அங்கமுத்து, தோடி கண்ணன், கோலத்து மணி, டி.வி. சேதுராமன், சி.கே.நாகரத்னம், வி.சரோஜா ஆகியோர் நடித்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார்.
உயர்ஜாதி வகுப்பினர் பெரும்பான்மையாக வாழும் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து வரவோ, கோவிலுக்குள் நுழையவோ, பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்புகிறான். அவனுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணான ஜானகி மீது காதல் வருகிறது.
ஆனால் ஜானகி எங்கள் மக்களும் கோவிலுக்குள் செல்ல எப்போது அனுமதி கிடைக்கிறதோ அப்போது நாம் காதலிக்கலாம் என்று கூறி இருவரும் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. ஆனால் படம் அப்போது சுமாரான வரவேற்பையே பெற்றது.