ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சென்னை : என் ஹார்ட் டிஸ்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேனு சொல்கிறார்கள் எனக் கூறி சென்னையில், பெப்சி அலுவலகம் முன் நடிகை சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா ஹெய்டன். கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் ஏராளமான நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ஜெய் நடித்த ‛கனிமொழி' என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றை தழுவி 'ஸ்மோக்' என்ற வெப்சீரிஸை இயக்கினார். ஆனால் இந்த வெப் சீரிஸை தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது என்று பலர் தன்னை மிரட்டி வருவதாக சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில் பெப்சி அலுவலகம் முன்பு சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள். எங்களிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் ரூ.8 லட்சம் வரை என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுபற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு பெப்சியிடம் முறையிட்டு இருந்தேன். இது நம்ம குடும்பமாச்சே நமக்கு உதவுவார்கள் என்று இருந்தேன். ஆனால் இதுவரை உதவவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு என் ஹார்ட் டிஸ்க், எனது பணம் வர வேண்டும். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும் தினமும் வந்து நான் போராடுவேன்''.
இவ்வாறு சோனா தெரிவித்துள்ளார்.