பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் | இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் | சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி | சுரேஷ் கோபி பட டைட்டில் பிரச்னையில் சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் கேள்வி | ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குன் வேணு எல்டண்டி. 'பலகம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அடுத்து 'எல்லம்மா' என்ற படத்தை இயக்க இருந்தார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை. எல்லம்மா என்பதே ஹீரோயின் பெயர்தான். இந்த படத்தில் நடிக்க வேணு, நடிகர் நானியை அணுகியபோது கதை நன்றாக இருக்கிறது. பவர்புல்லான ஹீரோயின் பட்ஜெட் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் எல்லம்மா படத்தில் நடிக்க நானிக்கு பதில் நிதின் ஒப்பந்தம் செய்யப்பட்டடார். நாயகிக்கு ஒரே சாய்ஸ் சாய்பல்லவி தான் என்று முடிவு செய்து அவரை அணுகியபோது கதை கேட்டு வியந்த சாய்பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.
தற்போது அவர் ராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அதற்கு இடையில் எல்லம்மா என்கிற ஒரு கோபமான பெண்ணின் கேரக்டரில் நடித்தால் சீதா கேரக்டரின் அமைதி இருக்காது என்பதை உணர்ந்த சாய்பல்லவி எல்லம்மா படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
சாய்பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் நடிக்க மறுத்துள்ள 3வது படம் இது. தற்போது எல்லம்மாவாக நடிக்க வேறு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.