கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குன் வேணு எல்டண்டி. 'பலகம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் அடுத்து 'எல்லம்மா' என்ற படத்தை இயக்க இருந்தார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை. எல்லம்மா என்பதே ஹீரோயின் பெயர்தான். இந்த படத்தில் நடிக்க வேணு, நடிகர் நானியை அணுகியபோது கதை நன்றாக இருக்கிறது. பவர்புல்லான ஹீரோயின் பட்ஜெட் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் எல்லம்மா படத்தில் நடிக்க நானிக்கு பதில் நிதின் ஒப்பந்தம் செய்யப்பட்டடார். நாயகிக்கு ஒரே சாய்ஸ் சாய்பல்லவி தான் என்று முடிவு செய்து அவரை அணுகியபோது கதை கேட்டு வியந்த சாய்பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.
தற்போது அவர் ராமாயணம் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அதற்கு இடையில் எல்லம்மா என்கிற ஒரு கோபமான பெண்ணின் கேரக்டரில் நடித்தால் சீதா கேரக்டரின் அமைதி இருக்காது என்பதை உணர்ந்த சாய்பல்லவி எல்லம்மா படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
சாய்பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் நடிக்க மறுத்துள்ள 3வது படம் இது. தற்போது எல்லம்மாவாக நடிக்க வேறு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.