லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர் என்றால் யார் என்று தான் தென்னிந்திய ரசிகர்கள் கேட்டிருப்பார்கள். ஆனால் அழகிய காதல் கவிதையாக வெளியான சீதாராமம் படத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் மிருணாள் தாக்கூர். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ஹாய் நன்னா திரைப்படமும் அவரது சிறப்பான நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.
கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த இயக்குனர் பரசுராம் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக ஐதராபாத்தில் பல்காம்பேட் எல்லம்மா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் மிருணாள் தாக்கூர். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.