மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர் என்றால் யார் என்று தான் தென்னிந்திய ரசிகர்கள் கேட்டிருப்பார்கள். ஆனால் அழகிய காதல் கவிதையாக வெளியான சீதாராமம் படத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் மிருணாள் தாக்கூர். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ஹாய் நன்னா திரைப்படமும் அவரது சிறப்பான நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.
கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த இயக்குனர் பரசுராம் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக ஐதராபாத்தில் பல்காம்பேட் எல்லம்மா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் மிருணாள் தாக்கூர். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.