'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
2005ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் 'அத்தடு'. திரிவிக்ரம் இயக்கிய இந்த படத்தில் மகேஷ் பாபு, திரிஷா, பிரகாஷ்ராஜ், சோது சூட், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், மணிசர்மா இசை அமைத்திருந்தார். வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் 'நந்து' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் இங்கு வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் 'அத்தடு' படம் தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பப்பட்ட முதல் படம் என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இத்தனை முறை எந்த படமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கான ஆதாரங்களோடு படக் குழுவினர் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளனர்.