லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
தேசத் தந்தை மகாத்மா காந்தி சினிமா மீது அதிக அக்கறை இல்லாதவர். அவர் சினிமாவும் பார்ப்பதில்லை. அதற்காக அவர் சினிமாவுக்கு எதிரானவரும் அல்ல. சிறு வயதில் 'ராம ராஜ்யம்' என்ற நாடகத்தை பார்த்துதான் தான் திருந்தி வாழ்ந்ததாக அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாகவும் இருந்தது.
அடிக்கடி அவர் ராம ராஜ்யம் குறித்து பேசியும் வந்தார். அப்படியான ஒரு காலகட்டத்தில் உருவான படம்தான் 'ராம ராஜ்யா'. இந்தியில் உருவான இந்த படம் இந்தியா முழுக்க திரையிடப்பட்டது. அந்த வருடத்தில் (1943) அதிக வசூலை கொண்ட படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்த படம் மகாத்மா காந்திக்கு போட்டுக் காட்டப்பட்டது.
விஜய் பட் என்பவர் இயக்கிய இந்த படத்தில் பிரேம் ஆதிப் ராமராகவும், ஷோப்னா சமர்த்த சீதையாகவும் நடித்திருந்தனர். அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகவும் ராம ராஜ்யம் அமைந்தது.