ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தேசத் தந்தை மகாத்மா காந்தி சினிமா மீது அதிக அக்கறை இல்லாதவர். அவர் சினிமாவும் பார்ப்பதில்லை. அதற்காக அவர் சினிமாவுக்கு எதிரானவரும் அல்ல. சிறு வயதில் 'ராம ராஜ்யம்' என்ற நாடகத்தை பார்த்துதான் தான் திருந்தி வாழ்ந்ததாக அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் ராம ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாகவும் இருந்தது.
அடிக்கடி அவர் ராம ராஜ்யம் குறித்து பேசியும் வந்தார். அப்படியான ஒரு காலகட்டத்தில் உருவான படம்தான் 'ராம ராஜ்யா'. இந்தியில் உருவான இந்த படம் இந்தியா முழுக்க திரையிடப்பட்டது. அந்த வருடத்தில் (1943) அதிக வசூலை கொண்ட படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்த படம் மகாத்மா காந்திக்கு போட்டுக் காட்டப்பட்டது.
விஜய் பட் என்பவர் இயக்கிய இந்த படத்தில் பிரேம் ஆதிப் ராமராகவும், ஷோப்னா சமர்த்த சீதையாகவும் நடித்திருந்தனர். அமெரிக்காவில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகவும் ராம ராஜ்யம் அமைந்தது.