ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்றைய லேடி சூப்பர் ஸ்டார். அவரும் எம்ஜிஆரும் இணைந்து நடித்து விட்டால் அந்த படம் சில்வர் ஜூப்ளி. இப்படியான காலத்தில் அவரை பாடகியாகவும் அறிமுகம் செய்தார் கே.வி.மகாதேவன்.
1969ம் ஆண்டு வெளிவந்த 'அடிமைப்பெண்' படத்தில்தான் ஜெயலலிதாவின் பாடகி அறிமுகம் நடந்தது. பல வருடம் சிறையில் இருந்து மீண்ட எம்ஜிஆருக்கு அவரது தாயின் அன்பை சொல்லும் பாடலாக உருவானதுதான் 'அம்மா என்றால் அன்பு'. இந்த பாடலை முதலில் பி.சுசீலாதான் பாடுவதாக இருந்தது. ஆனால் படத்தில் ஜெயலலிதா இந்த பாடலுக்கு நடிப்பதால் அவரே பாடினால் நன்றாக இருக்கும். கணீர் குரலுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதான அன்பு பெருகும் ஒரு பாடலை பாடினால் வித்தியாசமாக இருக்கும் என்று கருதிய கே.வி.மகாதேவன் அவரையே பாட வைத்தார்.
அதன் பிறகு ஜெயலிதா ஓ மேரா தில்ருபா (சூரியகாந்தி), கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் கன்னம் இரண்டும் ஐஸ்க்ரீம் (வந்தாளே மகராசி) .உலகம் ஒருநாள் பிறந்ததுஅது ஊமையாகவே இருந்தது (திருமாங்கல்யம்), சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் (அன்பைத் தேடி) உள்ளிட்ட பல பாடல்களை பாடினார்.
ஜெயலலிதா என்னும் பாடகியை உருவாக்கிய கே.வி.மகாதேவனின் 107வது பிறந்த நாள் இன்று.