வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

2025ம் ஆண்டில் தியேட்டர்களில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது. நேற்று மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 'அம்பி, அஸ்திரம்' ஆகிய படங்கள் பின்வாங்கிவிட்டன.
“படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி” ஆகிய 7 படங்கள் மட்டுமே நேற்று வெளியாகின. இவற்றில் ஒரு படம் கூட ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவைக்கவில்லை என தியேட்டர்காரர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
படம் வெளியான தினத்தில் யு டியூப் சேனல்கள், தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பது வழக்கம். நேற்று அவர்கள் சுற்றி வந்ததில் பல தியேட்டர்களில் பத்து பேர் கூட படம் பார்க்க வரவில்லை என்று சொன்னார்கள்.
ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த 'கிங்ஸ்டன்' படத்திற்காவது ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் அதற்கும் கூட்டம் வரவில்லை. பத்திரிகையாளர் காட்சியில் பாராட்டுக்களைப் பெற்ற 'ஜென்டில்வுமன், எமகாதகி' ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் வரவில்லை என்கிறார்கள். தமிழ் சினிமா நிலை இப்படியே போனால் என்ன ஆகும்?.
ஒரே நாளில் இத்தனை படங்களை வெளியிடுவதை எந்த ஒரு சங்கங்களும் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை என்று தியேட்டர்காரர்கள் வருத்தப்படுகிறார்கள்.




