2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
2025ம் ஆண்டில் தியேட்டர்களில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது. நேற்று மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 'அம்பி, அஸ்திரம்' ஆகிய படங்கள் பின்வாங்கிவிட்டன.
“படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி” ஆகிய 7 படங்கள் மட்டுமே நேற்று வெளியாகின. இவற்றில் ஒரு படம் கூட ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவைக்கவில்லை என தியேட்டர்காரர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
படம் வெளியான தினத்தில் யு டியூப் சேனல்கள், தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பது வழக்கம். நேற்று அவர்கள் சுற்றி வந்ததில் பல தியேட்டர்களில் பத்து பேர் கூட படம் பார்க்க வரவில்லை என்று சொன்னார்கள்.
ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த 'கிங்ஸ்டன்' படத்திற்காவது ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் அதற்கும் கூட்டம் வரவில்லை. பத்திரிகையாளர் காட்சியில் பாராட்டுக்களைப் பெற்ற 'ஜென்டில்வுமன், எமகாதகி' ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் வரவில்லை என்கிறார்கள். தமிழ் சினிமா நிலை இப்படியே போனால் என்ன ஆகும்?.
ஒரே நாளில் இத்தனை படங்களை வெளியிடுவதை எந்த ஒரு சங்கங்களும் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை என்று தியேட்டர்காரர்கள் வருத்தப்படுகிறார்கள்.