வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகபட்ச கட்டணம் என்பது ரூ.195 வரை உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதற்கும் அதிகமாகத்தான் உள்ளது. கர்நாடகாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 400 ரூபாய்க்கு அதிகமாகத்தான் உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் புதிய படங்களுக்கு பத்து நாட்கள் வரையில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கிறது.
கட்டணங்களை உயர்த்திவிட்டு 1000 கோடி வசூல் பெற்றதாக அவர்கள் கொண்டாடிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 200 ரூபாய்க்கு சற்று அதிகமாக டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூலித்து நல்ல வசூலைப் பெறுகிறார்கள். இங்கும் ஆந்திரா, தெலங்கானா போல இரண்டு மடங்கு வசூலித்திருந்தால் எப்போதோ 1000 கோடி வசூலை தமிழ்ப் படங்கள் கடந்திருக்கும்.
கர்நாடகா அரசு தற்போது ரூ.200க்கு மேல் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக அதுதான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துவிதமான மொழிப் படங்களுக்கும் அதுதான் கட்டணம்.
கடந்த பல வருடங்களாக கர்நாடகாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.600 வரை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பெங்களூரு மாநகரில் படம் பார்க்கச் சென்றால் அவ்வளவு செலவு ஆகும். அரசின் அறிவிப்பால் தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அதிக பொருட்செலவில் படமெடுத்து கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெறும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.




