என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து 'பைசன் - காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகிறார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பைசன் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் அவர், " நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய். நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார் மாரி.